கஷ்டத்தில் கட்டி அணைத்திட நண்பன் வேண்டும்.
சதுரங்க அடத்தின் ராணி போல் தோழியும் வேண்டும்.
என் வலிதனை புலம்பிடும் வேளையில் உணர்ந்து தழுவிட
தந்தையும் வேண்டும்.
தெளிவுடன் அன்புடன் அன்னையும் வேண்டும்.
நான் அழுது கதறிட,துக்கி வளர்த்திட தங்கை வேண்டும்.
என்னை விரும்பிடும் பிள்ளையும் வேண்டும்.
ஆண்டவன் என்பவன் நிஜத்தினில் வேண்டும்.
பாசமும் பந்தமும் நன்று தொடர்ந்திட வேண்டும்.
சேற்றிலே பூத்திடும் செந்தாமரை போலே, புன்னகை என்றுமே
இருந்திடல் வேண்டும்.
அகிணி குழம்பாய் ஏமாற்றம் கொண்டாலும்,
இமையம் போலே நின்றிடல் வேண்டும்.
முத்தமும் சத்தமும் ரத்தமாய் வேண்டும்.
இதில் கண்டதை கொண்டிடும் பிறந்தநாள் வேண்டும்.
No comments:
Post a Comment