Pages

Wednesday, April 25, 2012

இனிய பொழுது...!!!


அதிசயமாய் அன்று
விடியல் கண்டேன்..

இதயம் பட படக்க
காரணம் தேடினேன்..

அபூர்வமாய் அவள்
மின்னஞ்சல்....

அற்புதமாய் என்னுள்
மாற்றம் செய்தாள்...

வசிக்கும் இடம் தெரியாமலே
என் வாழ்வை  அவள் வாழ்ந்தாள்..

நிறம் அறியாமலே
என் இரவுகளை
பௌர்ணமியாக்கினாள் ..

நேரில் பாராமலே
நெற்றி முட்டி
கண்கள் பேசியபடியே
கனவுகளோடு காலம் கழிந்தது..

காணும்  முகவரி
ஒரு நாள் கொடுத்தாள்.

கண்டுவிட ஓடினேன்
அவள் திசை தேடி..

காதலி தான் வருவாள்
வாரி அணைக்கலாம்
என கண் மூடி
கை விரித்த வேளையில்..

காலை கட்டிய படி
மழலை ஒன்று என் முன்னே..

கேள்விகளோடு  கண் விழித்த
என் முன்னே
கணவனோடு  காட்சி தந்தாள்
என் கனவுக் கன்னி...

அந்த நொடி காதலோடு
கனவும் முடிய
அவள் சுட்டு போட்ட
ரொட்டியோடு மட்டுமே
ஊர் திரும்பினேன்..!!!

Wednesday, April 4, 2012

என் மகள்...


பாசம் என்னும் கருத்தரித்து.
வருடங்களாய் மனதில் சுமந்து.
இன்று அன்புடன் அழகுடன் பிறந்தது என் சின்னம் சிறிய பிள்ளை...

எனக்கு கிடைத்த புதையல் நீ.
என் பாதி ராத்திரி புலம்பலும் நீ.
மேகம் கிழிய உரக்க சொல்வேன் என் ஒரே மகளும் நீ.

என் குறும்பு பிள்ளை...!!!!


உடைந்த பொம்மைகள்..
உருண்டு ஓடும் தட்டு முட்டு சாமான்கள்.
தனி தனி காயிதமாய் புத்தகம்.
மண்ணின் நிறத்தில் மேல் ஆடை.
சகலடே தின்ற படி அவள் அழகு முகம்.
இந்த காட்சியை  காண கண்கள் இரண்டு போதவில்லை படைத்தவனே,
ஆயிரம் கணங்கள் வேண்டி வணங்குகிறேன்..

Tuesday, April 3, 2012

கண்ணாடிகள்....!!!!

உன் கண்ணைகாத்து உன்னைகாக்கும் மூக்கு கண்ணாடி தான் பெற்றோர்..

உன் வெற்றிகளையும் தவறுகளையும் பெரிதாய் பூதாகரமாய் கடும் பூதகண்ணாடி தான் காதலி..

உன் உட்புறம் அறியாமல் தானே பேசும் ஜன்னல் கண்ணாடி தான் சொந்தபந்தம்..

உன்னை உனக்கே அறிமுகம் செய்து,
உன்னை அழகாய்காட்டி,
நீ சிரித்தால் சிரிக்கும்..
அழுதல் அழும்..
அது உடைந்தால் உன்னை ஆயிரம் ஆயிரமாய் காட்டும்..
அந்த ஆயிரம் எல்லாம் உன் கவலை துடிப்புகளே..
ஆம் உருவால் மட்டும் வேறு பட்ட நட்பு தான் mugam parkum கண்ணாடி...!!!

சுவாசம் இல்லை...

காற்றிலும் சுவாசம் இல்லை.
காரணம்,,,
என் கண்மணி  என்னுடன் பேச வில்லை.

என் சின்ன சிறிய மகள்...

உயிர்ப்பித்து பூமி வந்த வெண்ணிலவு என் மகள்.
கடவுள் என்னும் சொல்லின் அர்த்தம் உணர்த்தியவள் அவள்.
மழலை மாறாத மங்கை,
என் மனதில் பொங்கி ஓடும் கங்கை அவள்.
சின்னம் சிறிய அதிசய பதுமை அவள்.
என் உள்ளம் முழுவது நித்தம் நித்தம் ஓடி விளையாடுதே அவள் அன்பு.
இதை சொல்லில் அடக்கிட முடியாமல் தவிகித்தே தமிழ் இலக்கியம்.

நட்பும் என் நண்பனும்.....!!!!

நட்பும் என் நண்பனும் சேர்ந்து.
இதயம் திருடும் காதலுக்கு பாடம் எடுப்போம்.
எதிர் பார்ப்புகளை எப்படி வெல்லனும் என்று.
பாசம் எப்படி வெல்லும் என்று..

பயம்,,,,

உலகின் பிரமாண்டமான மாயங்கள் இரண்டு.
கல்லுக்குள் கிடக்கும் கடவுளும்.
நெஞ்சிகும் துடிக்கும் பயமும்.
கழிவு கற்பனைகளை கற்களை எரிந்து பயத்தை விரட்டுங்கள் பிறக்கும் விடியல் உங்களது விருந்தாகும்.

மகளே என்னை மன்னிப்பாயா...!!!

மௌனம் பேசும் மகளே.
உன் மௌனம் கேட்கும் என் செவிகள்.
அமைதி பாடும் இதழ்களை ஆனந்தமாய் அதை அறிவேன்.
அமைதி,மௌனம் பாடிட ரசித்தேன்.
குரல் கேட்டிட துடித்தேன்.
பல பாடல்கள் பாடிட நினைத்தேன்.
யோசித்து யோசித்து ஒரு வரி அழகை என் திருமகள் உன்னை உயிர் என உணர்ந்தேன்.
நட்பும் காதலும் புதிதாய் கிடைக்கும்.
ஈசனும் தேவியும் கோவிலை தாண்டலாம்.
என் மலர்ந்த மூத்த மகள் மிண்டும் மலருமா...!!!
என்னுள் பூத்த மகள் நீ மாருமா...!!!
என் உச்சகட்ட கோவமும் நீ.
நான் அஞ்சும் என்னை மிஞ்சிய அசை,பாசம்,அன்பு,உலகம் எல்லாம் நீ.
பிள்ளை உன் சிரிப்பை கண்டு கொண்டாடிய நாள் கோடி.
உன்னை அழுகவைத்து அழுத நாலும் பல.
ஊரு உலகம் ஏசினால் நான் உன் வலி அறிந்து துடித்தேன்.
என் நாவு சில முறை உன்னை குத்திய பொழுதெலாம் ஏன் நான் மதி மறந்தேனோ.
உணர்ந்த சில கணங்களில் மன்னித்திட மன்டினேன்.
இத்தனை முறை கிட்டிய வரமான மன்னிப்புகள்.
இன்றோ இன்னும் என் வரவில்லை.
ஏன் பலமும் நீ,
பலவினமும் நீ.
மகளே என்னை மன்னிப்பாயா...!!!

வளர்ந்த சமுகம்...!!

கை பேசியில் உறவுகள்.
கணினியே கடவுளாய்.
உடைகளில் ஒழுக்கமும்.
காலை நடையினில் பழக்கமும்.
மழலை பூங்காவில் கெளரவம் கண்டு,
மதி மயங்கிய மக்களே.
அறிதிலும் அறிது மானுடராய் பிறப்பது அறிது.
பெறிதிலும் பெறிது கல்வி கற்பது பெறிது.
அரிதாய் பெரிதாய் இருந்து சிறிதாய் சிந்திப்பது  சரியோ...!!!

என் நண்பன்......!!!!!!!!

என் பல வகை உணர்ச்சிகளுக்கு கதாநாகன் அவன்.
என் கதையின் நாயகனும் அவன்.
எனது கண்ணீருக்கு பல முறை அனைகட்டினான்.
ஒரு சில முறை காரணன் இட்டினான்.
சவால் விடுகிறேன் சாமிகளே.
ஒரு நாள் உங்களுக்கும் உயிர் கொடுப்பான் என் நண்பன்.

அமுத மகளே....!!!!!!!!!

அமுதே.
நிலவின் நகலே.
எனது மகளே.
பகலில் உன் நிழல் நான்.
இரவில் உன் பாதை நான்.
வெளியில் துடிக்கும் உன் இன்னொரு இதயமும் நான்.
உருகுகிறேன் விரைவில் வா..!!!

அடுக்கு மாடி குடி இருப்பு...!!!!

ஆயிரம்கால் மண்டபமாய் வண்ண வண்ண வாசல்கள்..
தொந்தரவு செய்யாதே என்ற ஆங்கிலேய வாசகங்கள்..
வீட்டு கதவின் முன் புரம்கூட கண்டதில்லை வீட்டின் உட்புற அழகினை..
நடக்க இடமின்றி நிற்கும் நான்கு சக்கர வாகனங்கள்,
உதவிக்கு ஓடாத வண்ண ரதங்கள்..
விபத்தை வேடிக்கை பார்க்க கூட திரும்பாத  வசதியான உள்ளங்களே..
உங்கள் விலாசம் தான் அடுக்கு மாடி குடி இருப்ப...!!!

Monday, February 13, 2012

விவசாயின் மணு...!!!!


ஹெக்டேருக்கு சதுரடி நஷ்ட ஈடு தரும் தாராள அரசே.
உன் பாத்து மணிநேர மின்தடை கொண்ட இலவச மின்சாரம் கொண்டு தற்கொலை செய்ய குட இயலவில்லை.
இரண்டு ருபாய் அரிசிக்கி பதில் கலப்படம் இல்ல விஷம் ஒன்று தந்தாள் என் குடும்பத்தின் அணைத்து வாக்கலும் உங்களுக்கே. .!!

ஒரு குருடனின் குமுறள்.


பள்ளியறை இருட்டினிலே தொடங்கி.
பின்பு ஈரைந்து மாதம் கருவறை என்னும் இருட்டறையில் தொடர்ந்து.
இன்றோ கண்கள் இன்றி பிறந்து கருமையின் நிறம் கூட அறியாமல் கருகி கொண்டு இருகிறதே எங்கள் வாழ்க்கை.
மண்ணும் நெருப்பும் தின்னும் கண்ணை கழட்டி தாருங்கள் காலை கண்டு வணங்குவோம்..!!!